பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Thursday 28 July 2011

கவிதை கேளுங்கள் !....



நல்வாழ்வு 

விடியலுக்குத் தூரமில்லை விவேகத்தை வளர்த்துவிட்டால்
துவண்டுபோக வேண்டியதில்லை துணிவுடனே செயல்பட்டால்
தானாய்வரும் என்பதெல்லாம் வெறும்கனவு - திறந்திடு  
தகவோடுப்போரிட்டே நல்வாழ்வெனும்  கதவு.  


நல்லார்

சொல்லொன்றும் செயலொன்றும் கொள்ளார் - அல்லாமல்
சொல்லியதையே செயலாக்கி கொள்வார் – இல்லாதவர்
பொல்லாதவர் என்றெல்லாம் பாராரவர்;  நல்லார்
எல்லோரிலும் ஈசனையேக் காண்பார்.  


வாகை 


"எண்ணுவது உயர்வுள்ளல்" என்ற எண்ணமிதை - நீ

எந்நாளும் எண்ணாமல் உயர்வில்லை - அங்கே

எண்ணியதோடு நில்லாமல் திண்ணியமோடு உழைத்தால்

விண்ணைவளைத்து வாகைதனை சூடிடலாம்.




உண்மையின் தன்மையரியா அப்பாவிகள்.

உண்மையெது பொய்யெதன்பதை அறிந்திடுவார் - இருந்தும்
உண்மை மறைத்திடுவார் மரமென்னும் பொய்க்கொண்டே,  
உண்மையெனும் நெருப்பெரித்து அம்மரத்தை நீறாக்கும் - என்ற
உண்மையறியா அப் பாவிகளே. 


நன்றி வணக்கம் !...

தமிழ் விரும்பி. 


No comments:

Post a Comment