பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Tuesday 11 September 2012

எட்டயபுரத்திலே உதித்த சிகப்பு சூரியனே!




மஹாகவி பாரதி நமக்கு பல லட்சியங்களை விட்டுச் சென்று தொண்ணூறு ஆண்டுகளைத் தாண்டிவிட்டது...

மகாகவியின் இந்த நினைவு நாளில் அவனுடைய உயரிய சிந்தனைகளை இளம்பிஞ்சுகளின் மனதிலும் விதைக்க அரும் பாடுபடும் பெரியவர்களுக்கு எனது வணக்கங்களும், வாழ்த்துக்களும் கூறி...

பாரதிக்கு திருவையாற்றில் இருதினங்களுக்கு முன்பு எடுத்த விழாவின் சிலப் படங்களையும் பார்வைக்கு வைக்கின்றேன்!



இளங்குயில்கள் இரண்டு இனியகவிகள்பாட எந்தன்
இதயம் இனித்ததே இன்பத்தேனாய்!


புத்தம் புதுக்காலை புதியதோர் உலகம்படைக்கவே
புறப்பட்டோமென்றே பாரதியின் குழந்தைகளாக 
பூத்துக் குலுங்குங்கிய அவ்வேளை - நெஞ்சிலொரு
சக்திப்பிறக்கிறது அதைக்கண்ட இவ்வேளை !


உடல் போருளாவி யனைத்தையும் உயர்
உலகிற்கே அளித்து உன்னத மானுடம் 
உலகத்தோர் உயிர்க்கொடியில் பூக்கவே
உத்திகளை பாடிசென்றேயே பாரதி!

உனது நினைவுகள் மாத்திரம் அல்ல 
உனது கனவுகள் தான் எங்கள் 
உன்னத இலட்சியங்கள் அவைகளை
உன்னினைவுநாளில் புதுப்பித்து கொள்கிறோம்!

பாமரனையே நோக்கினாய் பாமரனோடு பழகினாய் 
பாமரனுக்காக பாடினாய் பாமரனை எண்ணி வாடினாய்
பாமரனையும் சாடினாய் பாடியக்கவிதைகளை சம்ர்பித்தாய் 
பாமரனுக்கே; பாமரன்யானதை மறப்பேனோ?

எட்டயபுரத்திலே உதித்த சிகப்பு சூரியனே 
எங்கள் இதயமெல்லாம் ஒளிபரப்பி - அறியாமை
என்னும் இருட்டைப்போக்கிய செந்தமிழ்கவிராஜனே! 
என்றென்றுமுனை  நன்றியோடு நினைக்கின்றோம்!

வாழ்க வளர்க பாரதியின் புகழ்!