பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label வாகை. Show all posts
Showing posts with label வாகை. Show all posts

Thursday, 28 July 2011

கவிதை கேளுங்கள் !....



நல்வாழ்வு 

விடியலுக்குத் தூரமில்லை விவேகத்தை வளர்த்துவிட்டால்
துவண்டுபோக வேண்டியதில்லை துணிவுடனே செயல்பட்டால்
தானாய்வரும் என்பதெல்லாம் வெறும்கனவு - திறந்திடு  
தகவோடுப்போரிட்டே நல்வாழ்வெனும்  கதவு.  


நல்லார்

சொல்லொன்றும் செயலொன்றும் கொள்ளார் - அல்லாமல்
சொல்லியதையே செயலாக்கி கொள்வார் – இல்லாதவர்
பொல்லாதவர் என்றெல்லாம் பாராரவர்;  நல்லார்
எல்லோரிலும் ஈசனையேக் காண்பார்.  


வாகை 


"எண்ணுவது உயர்வுள்ளல்" என்ற எண்ணமிதை - நீ

எந்நாளும் எண்ணாமல் உயர்வில்லை - அங்கே

எண்ணியதோடு நில்லாமல் திண்ணியமோடு உழைத்தால்

விண்ணைவளைத்து வாகைதனை சூடிடலாம்.




உண்மையின் தன்மையரியா அப்பாவிகள்.

உண்மையெது பொய்யெதன்பதை அறிந்திடுவார் - இருந்தும்
உண்மை மறைத்திடுவார் மரமென்னும் பொய்க்கொண்டே,  
உண்மையெனும் நெருப்பெரித்து அம்மரத்தை நீறாக்கும் - என்ற
உண்மையறியா அப் பாவிகளே. 


நன்றி வணக்கம் !...

தமிழ் விரும்பி.