பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Thursday 12 January 2012

மகான் உன்னை நினைக்கின்றேன்!



மகான் உன்னை நினைக்கின்றேன் -என்
மனமார நினைப் போற்றுகின்றேன்!

உலகம் செழிக்க உன்னதம் பெற்றிட
உலகமக்கள் உண்மையில் உறைந்திட
புதுநெறி புகுத்திய புதுமைத் துறவியே!

புதியஉலகம் படைக்க வேண்டியே
புவியெல்லாம் வலம் வந்தே -பல
புனிதர்களை படைத்த பிரம்மாவே! 

புண்ணிய பூமியின் புனிதம் காக்க
மண்ணின் மைந்தர்கள் நல்மனத்தை துளைத்து 
கருணை பொங்கும் மகத்துவம் செய்து...

மானுடம் வாழ மறுபிறவி சிறக்க
பிறப்பின் லட்சியம் அதை -இப் 
பிறவியிலே அடைய தியான மென்னும்
மெஞ்ஞான வழி காட்டிய ஞானப் பெருங்கடலே! 
இளைஞர் கூட்டத் தளபதியே! 

நீயும், நின் சிந்தனைத் தந்த அமுதமும் 
தேனுடன் பாலும் சேர்த்தாற் போலே
தேவனே! நீயுமென் சிந்தையில் சேர்ந்து...

நீ புவிக்கு வந்த அந்தப் புனித நாளின்
நினைவில் திளைத்து களித்து -மனம்மயங்கி 
விழித்து நின்னையே நினைத்து நினைத்து 
பேருவகை பெற்றிடும் இப்பொழுதில்...

பிறவிப் பெருங்கடல் நீந்த -என்னுள் 
பேரொளி பெருக அந்தப் பரமனை 
பேராவலில் உருகி வேண்டுகிறேன்.




6 comments:

மகேந்திரன் said...

ஆன்மீகச் செம்மல்
அறிவுலக வேதாந்தி

விவேக ஆனந்தரின் பிறந்த நாளன்று
மனம் இனிக்கும் பதிவு ஐயா.

Unknown said...

///மகேந்திரன் said...
ஆன்மீகச் செம்மல்
அறிவுலக வேதாந்தி

விவேக ஆனந்தரின் பிறந்த நாளன்று
மனம் இனிக்கும் பதிவு ஐயா.
13 January 2012 01:41////

நன்றி கவிஞரே!

krishnar said...

வரிக்கு வரி வார்த்தைகளை சிறைப்படுத்தி ஒழுங்கமைத்து கவி வடிக்கும்
தம்பி உங்களை கவிஞர் என்றே அழைக்க மனம் நாடுகிறது.
கவிதை பாராட்டுக்குரியது.
வாழ்த்துக்கள்.

கவலையான தகவல் ஒன்று.....http://www.thamilkkural.com/index.php?option=com_content&view=article&id=1906:2012-01-10-09-27-52&catid=76:localothers&Itemid=519

Unknown said...

///krishnar said...
வரிக்கு வரி வார்த்தைகளை சிறைப்படுத்தி ஒழுங்கமைத்து கவி வடிக்கும்
தம்பி உங்களை கவிஞர் என்றே அழைக்க மனம் நாடுகிறது.
கவிதை பாராட்டுக்குரியது.
வாழ்த்துக்கள்.

கவலையான தகவல் ஒன்று.....http://www.thamilkkural.com/index.php?option=com_content&view=article&id=1906:2012-01-10-09-27-52&catid=76:localothers&Itemid=519
13 January 2012 11:41////

தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் அண்ணா!
நானும் அந்த செய்தியைச் சென்று பார்த்தேன்...
ஏனோ தெரியவில்லை அதில் ஒரு சந்தோசம் அவர்களுக்கு....
மனதிற்குள் புகுந்த மாயை... விரைவில் தெளிவுறும் என நம்புவோம்.

ஷைலஜா said...

அருமை! விவேகாநந்தர் நம் பாரதத்திற்குக்கிடைத்த பொக்கிஷம்!

Unknown said...

////ஷைலஜா said...
அருமை! விவேகாநந்தர் நம் பாரதத்திற்குக்கிடைத்த பொக்கிஷம்!
13 January 2012 16:31 ////

உண்மைதான்... இன்னும் சொன்னால் மனித குலத்திற்கே அது பெரும் பாக்கியம் தான்.
நன்றிகள் சகோதிரி...

Post a Comment