மகான் உன்னை நினைக்கின்றேன் -என்
மனமார நினைப் போற்றுகின்றேன்!
உலகம் செழிக்க உன்னதம் பெற்றிட
உலகமக்கள் உண்மையில் உறைந்திட
புதுநெறி புகுத்திய புதுமைத் துறவியே!
புதியஉலகம் படைக்க வேண்டியே
புவியெல்லாம் வலம் வந்தே -பல
புனிதர்களை படைத்த பிரம்மாவே!
புண்ணிய பூமியின் புனிதம் காக்க
மண்ணின் மைந்தர்கள் நல்மனத்தை துளைத்து
கருணை பொங்கும் மகத்துவம் செய்து...
மானுடம் வாழ மறுபிறவி சிறக்க
பிறப்பின் லட்சியம் அதை -இப்
பிறவியிலே அடைய தியான மென்னும்
மெஞ்ஞான வழி காட்டிய ஞானப் பெருங்கடலே!
இளைஞர் கூட்டத் தளபதியே!
நீயும், நின் சிந்தனைத் தந்த அமுதமும்
தேனுடன் பாலும் சேர்த்தாற் போலே;
தேவனே! நீயுமென் சிந்தையில் சேர்ந்து...
நீ புவிக்கு வந்த அந்தப் புனித நாளின்
நினைவில் திளைத்து களித்து -மனம்மயங்கி
விழித்து நின்னையே நினைத்து நினைத்து
பேருவகை பெற்றிடும் இப்பொழுதில்...
பிறவிப் பெருங்கடல் நீந்த -என்னுள்
பேரொளி பெருக அந்தப் பரமனை
பேராவலில் உருகி வேண்டுகிறேன்.