பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label பிறந்த நாள். Show all posts
Showing posts with label பிறந்த நாள். Show all posts

Thursday, 12 January 2012

மகான் உன்னை நினைக்கின்றேன்!



மகான் உன்னை நினைக்கின்றேன் -என்
மனமார நினைப் போற்றுகின்றேன்!

உலகம் செழிக்க உன்னதம் பெற்றிட
உலகமக்கள் உண்மையில் உறைந்திட
புதுநெறி புகுத்திய புதுமைத் துறவியே!

புதியஉலகம் படைக்க வேண்டியே
புவியெல்லாம் வலம் வந்தே -பல
புனிதர்களை படைத்த பிரம்மாவே! 

புண்ணிய பூமியின் புனிதம் காக்க
மண்ணின் மைந்தர்கள் நல்மனத்தை துளைத்து 
கருணை பொங்கும் மகத்துவம் செய்து...

மானுடம் வாழ மறுபிறவி சிறக்க
பிறப்பின் லட்சியம் அதை -இப் 
பிறவியிலே அடைய தியான மென்னும்
மெஞ்ஞான வழி காட்டிய ஞானப் பெருங்கடலே! 
இளைஞர் கூட்டத் தளபதியே! 

நீயும், நின் சிந்தனைத் தந்த அமுதமும் 
தேனுடன் பாலும் சேர்த்தாற் போலே
தேவனே! நீயுமென் சிந்தையில் சேர்ந்து...

நீ புவிக்கு வந்த அந்தப் புனித நாளின்
நினைவில் திளைத்து களித்து -மனம்மயங்கி 
விழித்து நின்னையே நினைத்து நினைத்து 
பேருவகை பெற்றிடும் இப்பொழுதில்...

பிறவிப் பெருங்கடல் நீந்த -என்னுள் 
பேரொளி பெருக அந்தப் பரமனை 
பேராவலில் உருகி வேண்டுகிறேன்.