பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Sunday 11 September 2011

மகாகவி பாரதிக்கு நினைவாஞ்சலி!



சக்தியோடு கலந்த நித்திய பேரொளியே!
சாகாவரம் பெற்ற சமத்துவக் கவியே!
மனிதசாதி மண்ணிலே மாண்புற வாழ 
மகத்துவ கவிபலத்  தந்த மகாகவியே!

ஞாலம் போற்றும் ஞானியர்தம் கருத்தை
ஞாலம் உயரநாளும் உழைக்கும் - எளிய 
பாமரனும் அறிந்தே பயனுற வேண்டி

பாக்கள்பலப் பாடி; மாக்கள் அல்ல - நீவீர் 
பரமனின் மக்கள், மண்ணில் தெய்வம்
உண்மை, உழைப்பு, ஒற்றுமையோடு - இங்கே
ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி 

ஒருமையாய் உள்ள இயற்கையின் பன்மையை 
சக்தியின் தோற்றமதை நாளும் போற்றியே 
சத்திய ஜோதியில் கலந்துநற் கதிபெறுவீர்
சாத்திரம் வேண்டாம்வேறு பலசடங்குகள் வேண்டாம்

அன்பொன்றே போதும்ஆண்ட வனைச் சேர 
அன்பின் வடிவினன், அன்பில்வாழும் - அந்த 
அன்பின் பதம்பற்றி அன்பால்அன்பை அடைந்தே 
இன்பம் முருவீர் இன்னல் களைவீர் என்றே

மானுடம் சிறக்க மாகவி பாடிய - உலக
மகாகவி மறைந்து தொண்ணூறாண்டுகள் -ஆயினும் 
மனிதசாதிக்கு உழைத்து மங்காப்புகழ் கொண்ட
மாணிக்கப் பேரொளியை மனதாரப் போற்றுவோம்.

வாழ்க வளர்க மகாகவியின் புகழ்!
வாழிய! வாழிய!! வாழியவே!!!

அன்புடன்,
தமிழ் விரும்பி.  

No comments:

Post a Comment