பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Tuesday 1 November 2011

"ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ்" பேரறிவாளர் அவர்களின் கடைசி மணித்துளிகளில் சொர்கத்தில் திளைத்தார்(ஆ)!





சொர்க்கமும், நரகமும் ஒருவர் இறக்கும் தருவாயில் அவர்களின் அந்த ஜன்ம பாவ, புண்ணிய தன்மைக்கு தகுந்தாற் போல் அந்தக் கடைசி நிமிடத் தருவாயிலே அவர்களுக்கு தெரியுமாம்...

நிறைய சாதனைகள், புண்ணியங்கள், தர்மங்கள் என நல்லன யாவற்றையும் செய்து சத்தியத்தோடு வாழ்ந்தவர்கள் அவர்கள் உயிர் பிரியும் நேரத்திலே பல்வேறு நல்ல... அதாவது அவர்களின் ஆத்மாவிற்கு பேரானந்தம் தரும்படியானக் காட்சிகளைக் காண்பார்கலாம்... 

இதைத் தான் அப்படிக் காண்பதைத்தான் சொர்க்கம் என்பது.... என்று பகவான் ஸ்ரீ ரமணர் சொல்லியுள்ளார்கள்.... அப்படி இல்லாது வேறு ஒரு சொர்க்கம், நரகம் என்ற உலகம் இல்லை என்பதாகப் பொருள் படும்.

ஆக, நரகம் என்பது எப்படி இருக்கும் என்பதை சொல்லாமல் புரியும்.... 

அதாவது, இறக்கும் தருவாயிலே ஒவ்வொருவரின் உயிரும் (ஆத்மாவும்) சாட்சியாக நின்று தனது வாழ்வில் செய்த காரியங்களை கண்டு களிக்கும் / அல்லது தன்னையே நொந்து மரிக்கும் என்றும் கொள்ளலாம்.

அப்படியாக... நமது பேரறிவாளர் ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் கடைசி நேரத்தில்... உயிர் பிரியும் அந்த நொடிப்பொழுதில் அவர் கூறிய அந்த வார்த்தைகள் இதோ...


Sister on Steve Jobs's Last Words: "OH WOW. OH WOW. OH WOW."

Kara Swisher, On Monday 31 October 2011, 3:50 SGT
Apple Co-founder and Silicon Valley legend Steve Jobs lived a life that read like an epic novel, so it’s probably no surprise that his very last words on this temporal plane would be just as dramatic.
And they were: “OH WOW. OH WOW. OH WOW.”
That’s according to his sister Mona Simpson, whose moving euglogy was published in the New York Timestoday. It’s well worth a read, given what a gifted writer Simpson is — she is a much respected novelist — and the amazing subject.
Simpson opens with her desire for her estranged father to return to her life and be the be all and end all. Instead, it was Jobs.
“Even as a feminist, my whole life I’d been waiting for a man to love, who could love me,” she wrote. “For decades, I’d thought that man would be my father. When I was 25, I met that man and he was my brother.”
A fitting legacy, among many.
- "நன்றி யாகூ"


"OH WOW. OH WOW. OH WOW."

இந்த வார்த்தைகள் மூலம் அந்தப் பேரறிவாளர் ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் அவருக்கு விருப்பமான தனது சொர்கத்தை பார்த்து இன்புற்றே மறைந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது....

என்றோ!... பகவான் ஸ்ரீ ரமண மகிரிஷிகளின் கூற்றைப் படித்த நான்.. இப்போது பேரறிவாளர் ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸின் கடைசி வார்த்தைகள் மூலம் பகவானின் கூற்றை முழுமையாகப் புரிந்துக் கொண்டேன்.



நன்றி...

அன்புடன்,
தமிழ் விரும்பி.






5 comments:

விச்சு said...

நிஜமாவே வியப்பாக உள்ளது.

SURYAJEEVA said...

சரி தான், இப்படியும் கதை விடலாமா? சாகும் போது சொர்க்கம் நரகம் தெரியாது சார்...
நீங்கள் நல்லது செய்தால் உங்கள் மனம் குற்ற உணர்ச்சியில் இருக்காது, அது சொர்க்கம்..
நீங்கள் கெடுதல் செய்தால் உங்கள் மனம் குற்ற உணர்ச்சியில் கொள்ளும், அது நரகம்...
இது கெடுதல் என்று தெரியாமல் செய்பவனக்கு குற்ற உணர்ச்சி இருக்காது, இதை பகவத் கீதை இப்படி சொல்கிறது..
"உங்கள் மனசாட்சிக்கு எது தப்பு என்று தெரிகிறதோ, அதை நீங்கள் செய்தால் அது பாவம்..."
ஆகா உங்கள் மனசாட்சி தான் சொர்க்கம் நரகத்தை தீர்மானிக்கிறது.. சாகும் தருவாயில் அல்ல... வாழும் பொழுதே

Unknown said...

///விச்சு சொன்னது…
நிஜமாவே வியப்பாக உள்ளது.
௧ நவம்பர், ௨௦௧௧ ௨:௦௮ பிற்பகல்////

ஆமாம், எனக்கும் தான்...
நல்லது நன்றிகள் நண்பரே!

Unknown said...

////suryajeeva சொன்னது…
சரி தான், இப்படியும் கதை விடலாமா? சாகும் போது சொர்க்கம் நரகம் தெரியாது சார்...
நீங்கள் நல்லது செய்தால் உங்கள் மனம் குற்ற உணர்ச்சியில் இருக்காது, அது சொர்க்கம்..
நீங்கள் கெடுதல் செய்தால் உங்கள் மனம் குற்ற உணர்ச்சியில் கொள்ளும், அது நரகம்...
இது கெடுதல் என்று தெரியாமல் செய்பவனக்கு குற்ற உணர்ச்சி இருக்காது, இதை பகவத் கீதை இப்படி சொல்கிறது..
"உங்கள் மனசாட்சிக்கு எது தப்பு என்று தெரிகிறதோ, அதை நீங்கள் செய்தால் அது பாவம்..."
ஆகா உங்கள் மனசாட்சி தான் சொர்க்கம் நரகத்தை தீர்மானிக்கிறது.. சாகும் தருவாயில் அல்ல... வாழும் பொழுதே
௧ நவம்பர், ௨௦௧௧ ௨:௩௪ பிற்பகல்////

பகவான் ஸ்ரீ ரமணர் அவர்களின் கருத்தை தான் எனக்கு ஒப்பிடத் தோன்றியது.. அவர்கள் மகான்கள் இல்லையா?.. அதானால் ஏற்பட்ட அனுபவமாக கருதினேன்...
விஞ்ஞானம் சம்பந்தப் பட்டதை விஞ்ஞானியிடம் அறிவதைப் போல் மெஞ்ஞானம் சம்பந்தப் பட்டதை மெஞ்ஞானியின் கூற்றின் மூலம் காண்பது தானே சரி... கீதையை உதாரணம் காட்டியதும் சிறப்பே! அந்த மனசாட்சி தான் இந்த ஆத்மாவும் கூட...
தங்களின் இயல்பான (சமூக ரீதியாகவும் கவனிக்க வேண்டியதே) கருத்திற்கும் நன்றிகள் தோழரே!

Anonymous said...

ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் தனியாக ஒரு செல்போனை சுயமாக வடிவமைத்தவர்இல்லை. பல தொழில் துறை நிபுணர்கள் ஒருங்கிணைந்து தயாரிக்க பட்டது தான் அந்த செல்போன். ஆனால் ஐன்ஸ்டீன் யாருடைய உதவியும் இன்றி பார்முலா கண்டுபிடித்துள்ளார். அவர் இறக்கும் போது என்ன சொன்னார் என தெரியவில்லை. Attributism = It Consists in Accepting an abstract concept as reality, devised By the thinker, For the convenience of His/ Her Thinking.

Post a Comment