பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label சூரிய தேவன். Show all posts
Showing posts with label சூரிய தேவன். Show all posts

Sunday, 15 January 2012

நீயின்றி எதுவும் இல்லை!



உலகத்தை வாழ்வித்துக் காப்போன் -நல்
உலகமதை ஒளியில் நிறைப் போன்
பிரபஞ்ச படைப்பின் ஆதியவன் -அவன்
கரம், நமைப்பற்றி அணைக்கவே -நன்றியோடு 
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் -சிக்கென
அவன் தாள் பிடித்தே பணிந்திடுவோம் !
சிவனே போற்றி! சீவன் காக்கும் 
தேவனே! தேவாதிதேவனே !! போற்றி!!!

பொங்கலோ பொங்கல் என்றே -புவியோர்
மங்களம் பொங்க; அன்போடு, நன்றியும்
ஆனந்த வாழ்வதும் எங்கும் பொங்கிடவே! 
வானம் பொய்க்காது வையமெல்லாம் செழிக்கவே!
தானதர்மங்கள் சிறந்து தரணியெல்லாம் மகிழவே! 
நாளும் நானிலம்காக்கும் நாயகனை - நம் 
பாலும் மனத்தை பரிசுத்த மாக்கியே
பரந்தாமன் சூரிய நாராயணன் -அவன் 
கரம்பற்றி அணைக்கவே கனிவோடு வணங்குவோம் 
எமைக் காப்பாய் கருணைக்கடலே! 

சூரியனே போற்றி! சுடர் மிகு தேவனே போற்றி!!
நாதனே போற்றி! ஆதி மூலனே போற்றி!
நல்லோர் தீயோர் என்னும் பேதமிலாது
எல்லோரும் இன்புற்று வாழவே - எந்நாளும் 
அருளும் ஏகாந்த மூர்த்தியே போற்றி!
போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
போற்றி!! போற்றி!! போற்றி!!

இனியப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.