பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label விநாயகர் துதி. Show all posts
Showing posts with label விநாயகர் துதி. Show all posts

Thursday, 1 September 2011

வினைகள் தீர்ப்போய் போற்றி!



சதுர்த்தி வணக்கங்கள் குருவே!...

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு 
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு.
   ஒளவையார் 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் 
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு 
சங்கத் தமிழ் மூன்றும் தா -  ஒளவையார் 



காலைப் பிடித்தேன் கணபதி! நின்பதங் கண்ணில் ஒற்றி
நூலைப் பல பல வாகச் சமைத்து நொடிப் பொழுது

வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள்செய்துன்

கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறிஎனக்கே.
- மகாகவி சுப்ரமணிய பாரதி.



ஆனை முகத்தோனே ஆறுமுகன் சோதரனே 

தானைத் தலைவனே தமிழமுது அளிப்பவனே 

வேதநாயகனே வேண்டும்வரம் தருபவனே - நின் 
பாதம் பணிந்து வணங்குகிறேன். - தமிழ் விரும்பி.





அன்புடன் வணக்கம்,

தமிழ் விரும்பி.