பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label பிறந்தநாள் விழா. Show all posts
Showing posts with label பிறந்தநாள் விழா. Show all posts

Monday, 12 December 2011

மகாகவியின் 130 -ஆவது பிறந்தநாள் விழா!



மகாகவி ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் 130- ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம். தமிழுலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு வருகிறது.
அப்படி நமது மகாகவிக்கு திருவையாறு பாரதி இயக்கமும், திருச்சி வானொலி நிலையத்தாரும் சேர்ந்து, பாரதியின் 130- ஆவது பிறந்தநாள் விழாவை அதி விமர்சியாக கொண்டாடி இருப்பதை அறிந்து அன்னைத் தமிழின் சார்பாக மகிழ்ச்சியை தெரிவிப்பதோடு, அவ்விழாவிற்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மகாகவிக்கு ஒரு இனியவிழா!
மகத்தான அறிஞர்கள் கூடியவிழா!
மாணிக்க ஒளியவன் கவிதையிலா,
மாமன்ற பேச்சும் மனதில் நில்லா!

கவிதை வானில் அவன் கவிநிலா,
காலங்கள் கடந்தும் வந்திடும் உலா!
வேதங்கள் புதுமைச் செய்த கலா!
வேதாந்த லட்சியம் விளம்பிய முழா!

அவன்கவி வேரிலே பழுத்தப் பலா,
வெடித்து தேனிலே நனைந்தச்சுளா! 
அடிமைத் தலையை அசைத்ததிலா
ஆணோடு பெண்ணையும் அமர்த்தியதிலா

அன்னைத் தமிழை போற்றியதிலா 
அகிலமெலாம் உயர எண்ணில்லா
அறிவுத்தரவே மண்ணில் வந்தநிலா 
மகாகவி இவனோ உலக கவிஉலா!

மகாகவி பாரதி! ஒரு யுகபுருஷன் இவன் புகழ் 
வாழிய! வாழிய!! வாழியவே!!!

அவ்விழாவைப் பற்றி அறிய விரும்புவோர் கீழ்கண்ட தளங்களுக்குச்  சென்று பார்க்கலாம்.



நன்றி வணக்கம்.