பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Monday 20 February 2012

கூடலில் முக்கூடலில் தேடலில்...!




போற்றிடு மனமே பொல்லா வினையறுக்கும் 
பொற் பாதம் தினமே.

தினமும் யாதொரு கணமும் எந்தன்
மனமும் நினைமறக்கவும் கூடுமோ?

கூடலில் முக்கூடலில் தேடலில் -தேடுவோர்
பாடலில் தித்திக்கும் அமுதே!

அமுதே ஆருயிரே ஆலகாலம் உண்டே
குமுதக் குவலயம் காத்தோனே!

காப்பாய் கதிரொளி நிறைமதி நிமலா
பா(ர்)ப்பாய் என்றே பணிந்தோமே.

பணிந்தோம் நின்பாத மலர் -எனவே 
துணிந்தோம் நினைச்சேர தூயனே!

தூயனே மாயையின் மணாளனே -எங்கள்
நேயனே தடுத்தாள்வை தேவதேவனே!

ஈசனே எந்தையே என்னிலை யானுறுனிம்
நேசனேநினை நினைக்கையில் சிந்தையில் தேனூறும்
பூசனை வேறொன்றும் யான்புரியேன் -அல்லால்நின் 
தாசனாய் கமலப்பாதம் போற்றியே!


7 comments:

இராஜராஜேஸ்வரி said...

போற்றிடு மனமே பொல்லா வினையறுக்கும்
பொற் பாதம் தினமே.


தினம் படிக்கவேண்டிய பிரார்த்தனை வரிகளாய் அருமையான படைப்புக்குப் பாராட்டுக்கள்..

மகேந்திரன் said...

எந்தையை..
எம்பெருமானை..
அந்தாதி பாடி புகழ்வித்தமை
மனதில் இன்ப ரீங்காரமிடுகிறது ஐயா..

Shakthiprabha (Prabha Sridhar) said...

போற்றிடுவோம். போற்றிடுவோம். நன்றி.

Unknown said...

////இராஜராஜேஸ்வரி said...
போற்றிடு மனமே பொல்லா வினையறுக்கும்
பொற் பாதம் தினமே.


தினம் படிக்கவேண்டிய பிரார்த்தனை வரிகளாய் அருமையான படைப்புக்குப் பாராட்டுக்கள்..////

நன்றிகள் சகோதிரியாரே!

Unknown said...

/////மகேந்திரன் said...
எந்தையை..
எம்பெருமானை..
அந்தாதி பாடி புகழ்வித்தமை
மனதில் இன்ப ரீங்காரமிடுகிறது ஐயா..///

நன்றி கவிஞரே...

Unknown said...

////Shakthiprabha said...
போற்றிடுவோம். போற்றிடுவோம். நன்றி.///

நன்றிகள் சகோதிரியாரே!

Yaathoramani.blogspot.com said...

அருமையான அந்தாதிப் பாடல்
படித்து ரசத்ிதேன்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment