பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Monday, 19 December 2011

பச்சை வண்ண மேலாடை -அதில் பால் அன்ன நீரோடை!...



ச்சை வண்ண மேலாடை -அதில் 
பால் அன்ன நீரோடை -மனம் 
இச்சை கொள்ளும் பூஞ்சோலை -அதன் 
இடை இடையே சிறு பாறை...!

நெட்டை நெடிய மரங்களின் ஊடே
நிலையில்லா வாழ்வைப் போலே
அலை அலையாய் பனி மூட்டம்...!

கடலில் குளித்து எழுந்ததுமே தனது 
கரங்களை நீட்டும் கதிரவனும் -அவன்  
இரவெல்லாம் பிரிந்த விரகதாபம் தீர
பச்சைமலை நோக்கிப் பரவுகின்ற அற்புதக்காலை...!



நெடுதுயில் போட்டத் இளந் தென்றலோ 
நெட்டை மரங்களுக்கு விடைகொடுத்தே
நெளிந்து; விரிந்து; நறுமலர் அமர்ந்து,
தணிந்து உயர்ந்து; சுருங்கி அகண்டு
சுகந்தமாய் பறந்தே கிளம்பும் போதே...!

பனிப் போர்வை மூடித் தூங்கும் 
மலை யவளின் முகத்திரையை -மிகப் 
பவ்வியமாக நீக்கியே; தாய்ப்பாசம் பொங்கி 
அவளின் உச்சி முகர்ந்து  புறப்பட்டபோது...!



இரவெல்லாம் காத்து கடுங்குளிர் கோர்த்து 
இரங்கக்கேட்டே; இராவண ஏக்கம் -ஏங்கிக் 
கிடந்த பனி மூட்டமோ -இளம் 
இரவியின் வரவால் வியர்வைத்
துளிகளை விடுத்தே மிக வேகமாக 
விரைந்து சென்று மறைந்ததுவே...!


காதலன் அவனைக் கண்டதால் -அழகு
இராமனைக் கண்ட சீதையைப் போல் 
பச்சைவண்ண மலையோ மொத்தமும் பூத்து 
பலவண்ண ஓவியம் ஆகியதே -அதில்
இச்சை கொண்டே இளங்குயில் ஒன்று
இனிதே, மிகஇனிதே; தேன்சொட்டும்
பாடல் ஒன்றை இசைத்ததுவே...!

மனம் கொள்ளை போகும் பாடலுக்கோ... 
மனமயங்கிய தும்பிகள் யாவுமே -ஆங்கே 
மறந்தே போயின மது உண்ண...!




தும்பிகளே மயங்கிய தென்றால் -அதைச் 
சொல்லவும் வேண்டுமோ!, மெல்லியத் தளிர்  
அரும்பும், மொட்டும், போதுகளான -வண்ண 
நறும் பூக்கள் யாவும் அதுபோலவே...!


மதுக் குடம் ஒத்த மலர்க் கூட்டம் -அம்
மலர்களது மடிகள் கனக்க தேனூறி 
ஊரியத் தேனும் பெருக் கெடுத்தே 
மடை திறந்த அருவியைப்போல் -மலர்க்
காம்புகள் வழியே பாய்ந்தோடும்…  


தேன் பாயும்; தேனாறு அதுவும்
தேங்காமல் குளிர் நீரோடை 
உடுத்தும் மேலாடையாக -அங்கே
குளித்து எழும் பூங்காத்தையும்
மது மயக்கம் தந்தே தான் ஓடும்…! 


ஓடை யாவிலும் குதித்து தாவி 
ஓடிவரும் நீர்த் திவலை களை
ஓடி உடைக்க எதிர்த்து; முட்டிமோதி
அங்கே குஞ்சுகளோடு கொஞ்சி விளையாடும்
செக்கச் சிவந்த கெண்டை கயலோடு,
கெளுத்தியும்; அயிரையும்; கருத்த விராவும்;
பெருத்த வாழையும் சேர்ந்தே -அசுரவேகம்
பாயும் ஆராவுமாக அத்தனையும் சேர்ந்தே
ஆனந்தக் கூத்தாடும்மின்னலொளி மின்னும் 
அழகு வெள்ளி ஓடையதை காண்பார்தம்
மனம் கொள்ளை போம்...!

இத்தனை அழகும் இனிதாய் பெற்ற
அற்புத எழில் மலை!... அழகாய்.... 
என் கற்பனையில் வளர்ந்தே -இப்போது
அழகுக் கவிதையாய் மலர்ந்ததே!...