பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Wednesday 14 December 2011

என் உள்ளம் கவர்ந்த கள்வனே! எருதமர்ந்து ஏகிய இமய வரதனே!



திருமுறைச் சாரம் பாடல் இரண்டு.

என் உள்ளம் கவர்ந்த கள்வனே!
எருதமர்ந்து ஏகிய இமய வரதனே!
முதிர் ஆமை ஓட்டையும் அதனுடனே
சதிர் வராக முளைப் பல்லையும்
கதிர் நின் மேனியெல்லாம் படர்ந்ததால்

சதுர வேத நாயகனே - நின் 
மதுர மார்பில் மாலை யானதால் 
முதிர் என்றும் அடையா - இளம்
நாகத்தையும் திருமார்பில் ஆரமாய் சூடியே

திருவோடு தாங்கியே சுந்தரஉருவோடு 
அருவமுமான குருவே என் இதயம்
நிரம்பிய அமுதே; நின் பூங்கழல் 
போற்றும் சான்றோர் தமக்கே தீங்கிலா
ஏற்றம் அளிக்கும் பொருட்டே - எழில்
பெற்றம் அமர்ந்து ஏகிய ஈசனே!

பிரமப்புரம் ஆளும் பெருந்தேவனே -நின்
பொற்பாதம் பணிகிறேன் நித்திய தேவனே
தப்பாமல் எனைத் தடுத்தாண்டு கொள்வாயே
கயிலை மலை நாதனே!- மாசற்ற
கனக மணி மார்பனே; கட்டழகனே; 
பார்வதிநாதனே எம்மை பரிந்துக் காப்பாய் 
பார்போற்றும் இப்பிரபஞ்சத் தலைவனே! 

திருச்சிற்றம்பலம்.

2 comments:

ஷைலஜா said...

பார்வதி நாதன் நம்மை பரிந்து காப்பான்! நல்ல கவிதை சகோதரரே.

Unknown said...

////ஷைலஜா said...
பார்வதி நாதன் நம்மை பரிந்து காப்பான்! நல்ல கவிதை சகோதரரே.
14 December 2011 08:33///

ஆஹா! அருமை... ஒருவாசகம் அது திருவாசகம் உங்கள் பின்னூட்டம் தந்த அழகு வாசகம் அதனையும் பாடலோடு சேர்த்து விட்டேன் சகோதிரி.

Post a Comment