பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label மகாகவி. Show all posts
Showing posts with label மகாகவி. Show all posts

Monday, 24 December 2012

மகாகவியவன் நினது குருவென்பதை மறந்தாயோ?



பொழுதுப் போக்க நீயொன்றும் -சும்மாப்

புளுக வேண்டாம்; மனமே!

போதைத் தரும் புகழுக்கு -அதிப்

பேதையென அலைய வேண்டாம் மனமே!

அடுத்தவர் அங்கீகரிக்க வேண்டுமென -அனுதினமும்

பிடித்ததெல்லாம் பேயெனச் செய்யாதே மனமே!

 

தடுத்தவர் கூறினாலும் கருத்தைத் தவறென

மறுத்தவர் கூறினாலும் அதுன்னை -வந்து

வருத்துவதும் வீணே; என்றுணர்வாய் மனமே!

கருத்து தனைக்கூற உனக்கிருக்கும் உரிமை

மறுத்தவர்கூற மட்டுமல்லாது போகுமோ மனமே!

அங்கீகாரம் வேண்டுவதும் ஆணவத்தின் தூண்டுதலே

அகங்காரம் கொண்ட அற்பமனமே - நினது

அகமழிய; வேண்டாம் அப்படியொரு ஆறுதலே!

 

உங்கருத்தை அங்கீகரித்தாலும்; இங்கீகரித்தாலும் மனமே

ஆங்கதவர் அனுமானமோ; அபிப்ராயமோ அன்றி

ஈங்கிது இறுதியான உறுதியான சரியான

ஓங்குயர் கருத்தென்று நெகிழ்ந்துழலாதே மனமே!

 

''என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ!'' - அவை அத்தனையும்
''தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே'' முன்னைய முனிவர்

கருத்தை அன்றே அழகுறப் பாடி

திருத்தமாக சொன்னானே மகாகவியவன் நினது

குருவென்பதை மறந்தாயோ? மடமனமே!


Thursday, 6 October 2011

பிராமணர்கள் யார்? இதில் பாரதி கூறியது யாது?











பிராமணர்கள் யார்?
இதில் பாரதி கூறியது யாது?

பிராமணர்கள் யார் என்று மகாகவி பாரதியார் தனது கட்டுரை ஒன்றில் கூறியிருக்கிறார். ஆக, அந்தக் கருத்தை மையாமாக வைத்து மகாகவி பாரதியின் வழியே சிந்திப்போம்....

பிராமணர்கள் யார்? என்ற அந்த கட்டுரையை வாசிக்க இந்த சுட்டியை அழுத்தவும் 


உங்கள் கருத்துக்களையும் அங்கே நீங்கள் பதிவிடலாம். அதோடு ஒரு முக்கிய விவரம் அங்கே இன்னும் பல அறிய பல தகவல்களையும் நீங்கள் படித்து பயன் பெறலாம். இன்றய வலையுலகில் குப்பைகள் நிறைந்த சூழலில் இது போன்ற அறிவு சால் வலைப் பதிவுகள் பார்ப்பது அரிது என்பது எனது கருத்தும் ஆகும். வாருங்கள் செல்வோம்..

நன்றி வணக்கம்.

அன்புடன்,
தமிழ் விரும்பி - ஆலாசியம் கோ.


Sunday, 11 September 2011

மகாகவி பாரதிக்கு நினைவாஞ்சலி!



சக்தியோடு கலந்த நித்திய பேரொளியே!
சாகாவரம் பெற்ற சமத்துவக் கவியே!
மனிதசாதி மண்ணிலே மாண்புற வாழ 
மகத்துவ கவிபலத்  தந்த மகாகவியே!

ஞாலம் போற்றும் ஞானியர்தம் கருத்தை
ஞாலம் உயரநாளும் உழைக்கும் - எளிய 
பாமரனும் அறிந்தே பயனுற வேண்டி

பாக்கள்பலப் பாடி; மாக்கள் அல்ல - நீவீர் 
பரமனின் மக்கள், மண்ணில் தெய்வம்
உண்மை, உழைப்பு, ஒற்றுமையோடு - இங்கே
ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி 

ஒருமையாய் உள்ள இயற்கையின் பன்மையை 
சக்தியின் தோற்றமதை நாளும் போற்றியே 
சத்திய ஜோதியில் கலந்துநற் கதிபெறுவீர்
சாத்திரம் வேண்டாம்வேறு பலசடங்குகள் வேண்டாம்

அன்பொன்றே போதும்ஆண்ட வனைச் சேர 
அன்பின் வடிவினன், அன்பில்வாழும் - அந்த 
அன்பின் பதம்பற்றி அன்பால்அன்பை அடைந்தே 
இன்பம் முருவீர் இன்னல் களைவீர் என்றே

மானுடம் சிறக்க மாகவி பாடிய - உலக
மகாகவி மறைந்து தொண்ணூறாண்டுகள் -ஆயினும் 
மனிதசாதிக்கு உழைத்து மங்காப்புகழ் கொண்ட
மாணிக்கப் பேரொளியை மனதாரப் போற்றுவோம்.

வாழ்க வளர்க மகாகவியின் புகழ்!
வாழிய! வாழிய!! வாழியவே!!!

அன்புடன்,
தமிழ் விரும்பி.  

Wednesday, 31 August 2011

"பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்"



"பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்"



''சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்;
சஞ்சலங்கள் இனிவேண்டா;சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்;
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்".

எம்மதமும் சம்மதம்... உலகில் உள்ள எல்லா மதமும் உரைப்பதுவும் அதுவே! வேதாந்த சாரம் அது தான் அத்தனை மதங்களின் மறைகளின் சாரம் என்பதை மகாகவி பாரதியார் அருமையாக பாடியுள்ளதைப் போலவே...

அவர் இஸ்லாமிய மார்க்கத்தின் கடவுளாகிய அல்லாவையும் பாட மறக்கவில்லை. அந்த அற்புத வேதநாயகத்தின் புகழினை பாரதி பாடுவதை, இன்று இந்த ரம்ஜான் பண்டிகையின் போது நாமும் அக மகிழப் படித்து அந்த அல்லாவின் அருள் தனை பெறுவோமாக!!!.

அல்லா.

அல்லா, அல்லா, அல்லா,

சரணங்கள்

பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள் 
எல்லாத் திசையினும் ஊர்எல்லை இல்லாவெளி வானிலே!
நில்லாது சுழன்றோட நியமம்செய்த தோர்நாயகன்
சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பரஞ்சோதி (அல்லா)

கல்லாதவர் ஆயினும், உண்மை சொல்லாதவர் ஆயினும்,
பொல்லாதவர் ஆயினும், தவம் இல்லாதவர் ஆயினும்,
நல்லார் உரை நீதியின் படி நில்லாதவர் ஆயினும்,
எல்லாரும் வந்து ஏத்தும் அளவில் எம பயம் கெடச் செய்பவன் (அல்லா)

ஏழைகட்கும் செல்வர்கட்கும் இரங்கியருளும் ஓர்பிதா 
கோழைகட்கிம் வீரருக்கும் குறைதவிர்த்திடும் ஓர்குரு
ஊழி,ஊழி,அமரராய், இவ் வுலகின்மீதில் இன்புற்றே 
வாழ்குவீர் பயத்தைநீக்கி வாழ்த்துவீர் அவன்பெயர் (அல்லா) 

புனித ரம்ஜான் பண்டிகை முதன் முதலில் கி.பி. 634 - முதல் கொண்டாடப் படுவதாக அறிகிறேன்.



மேலும், 786 என்ற இந்த எண்கள் முதன் முதலில் திருக்குரான் எழுதப் பட்ட போது எடுத்துக் கொள்ளப் பட்ட பக்கங்கள் என்று அறிகிறேன்... உண்மைதானா? என்பதை நமது இஸ்லாமிய நண்பர்கள் தான் கூற வேண்டும்....

நன்றி வணக்கம்,
அன்புடன்,
தமிழ் விரும்பி.