பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label யாழ்த் தமிழன். Show all posts
Showing posts with label யாழ்த் தமிழன். Show all posts

Wednesday, 4 January 2012

என் தமிழ்மொழி மேல் உனக்கு ஏனிந்தக் கொலைவெறிடா?




உணர்ச்சிப் பெருக்கை உள்ளக் குமுறலை 
எரிமலையென பொங்கியக் கோபக் கனலை 
பேய் முரசாகக் கொட்டாமல் மிகவும் மெல்லிய 
வரிகளில் யாழின் இசையாக வழிந்தோட 
வைத்திருக்கிறான் என் சகோதரன்... 

அது தான் அவன் யாழ்பாணத்தில் 
வாழ்வதின் நியதியோ!!!....  
என்னுயிர் சகோதரர்களே...
உங்களின் தமிழ் பற்றுக்கு 
நான் தலைவணங்குகிறேன்...

கொலைவெறியுடன் தமிழை கூறுபோட்ட தமிழ் சினிமா "கொலைவெறிப் பாடலை மனதில் வைத்து தனது உள்ளக் குமுறலை ஒரு எச்சரிக்கை சங்க நாதமாக எமது சகோதரர்கள் எழுப்பிய அற்புதத்தைப் பாருங்கள்!!!..


இதோ காணொளியைக் கண்டு ரசியுங்கள்.



பாடல்.

என் தமிழ்மொழி மேல் உனக் ஏனிந்தக் கொலைவெறிடா?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா!
கல்தோன்றி மண்தோன்றா முன்வந்த தமிழ் மொழிடா!- நீ
தமிழன் என்றா(ல்) கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா!

செம்மொழிப் போற்றும் செந்தமிழ் நாட்டில் 
தமிழுக்கு ஏன் பஞ்சம்?
தமிழை விற்றுப் பதக்கம் வாங்கும் 
தமிழா! கேள் கொஞ்சம்...

கம்பனின் வரிகள் வள்ளுவன் குறள்கள்
பாரதிக் கவிகள் எங்கே?...
தொன்று தொட்டு பழமை பாடும் 
தமிழனின் பெருமை எங்கே?... 

என் தமிழ்மொழி மேல் உனக் ஏனிந்தக் கொலைவெறிடா?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா!

ஏசு, புத்தன், காந்தி சொன்ன அஹிம்சை 
வழியைக் கேளு -தினம்
தமிழின் செழுமை படிச்சு வந்தா 
தணியும் கொலைவெறி பாரு! 

ஆஸ்கார் வாங்கியத் தமிழன் சபையில் 
பெருமை சேர்த்தான் தமிழில்!
செம்மொழிப் பாடிய புரட்சிக் கவிஞன்
தன் னுயிர்க் கலந்தான் தமிழில்!...

தமிழை வாழவை! இல்லை வாழவிடு!
இன்னும் தாங்காதடா மனசு...
தமிழன் என்று சொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அது மட்டும் தான் இருப்பு...

தமிழுக்காக உழைத்தவன் எல்லாம் 
வாய்ப்பை இழந்து நின்றான்...
தமிழை விற்று பிழைத்தவன் எல்லாம் 
நான் தான் கலைஞன் என்றான்...

பணத்திற்காக படைத்தவன் எவனோ 
உண்மைக் கலைஞன் இல்ல -அவன் 
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்  
அவனும் ரசிக னில்லை...

என் தமிழ்மொழி மேல் உனக்கு ஏன் இந்தக் கொலைவெறிடா
தமிழா!...
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா!
தமிழா!...

யாழ்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா!
தமிழா!என் தாய்மொழி தமிழைக் காப்பது 
தமிழனின் கடமை யடா!...

பாடல் ஆக்கம்: எஸ்.ஜே ஸ்டாலின், யாழ்பாணம்.
ஒலி, ஒளி வடிவம்: வர்ணன் மற்றும் அமலன். யாழ்பாணம்.

****************************************************************************
"இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை 
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" 
- மகாகவி பாரதியார்.

செந்தமிழ் நாட்டுத் தமிழன் மறந்தாலும் 
யாழ்ப்பாணத் தமிழா! என் சகோதரா... 
இப்போது தான் புரிகிறது இயற்கை ஏன்
உன்னை உலமெல்லாம் பரவச் செய்தது என்று...
அடுத்த ஜன்மம் இருந்தால் - அது 
உங்கள் வீட்டில் எனக்கு அமையட்டும்... 


நன்றி: ATHIRVU.COM & www.yazhmusic.com